கோவில்பட்டி: மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 100 சதவீத அளவுக்கு கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என்ற அளவுக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.