×

கொரோனா பாதிப்பு நீங்க வேண்டி ஒற்றைக்காலில் சாமியார் தவம்

அஞ்சுகிராமம்: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த காணிமடத்தில் யோகிராம் சுரத்குமார் மந்திராலயம் உள்ளது. இந்த மந்திராலயத்துக்கு தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா,  கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்,  சிங்கப்பூர், மலேசியா உள்பட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதற்கிடையே கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது.

ஆகவே கொரோனா வைரசில் இருந்து உலக மக்கள் மீள வேண்டும் என்பதை வலியுறுத்தி காணிமடம் யோகிராம் சுரத்குமார் மந்திராலயத்தில் சிறப்பு பூஜை, சிறப்பு லோக ஷேம யாகம் ஆகியவை நடந்தது.  தொடர்ந்து பொன் காமராஜ் சுவாமிகள் சடை சித்தர் முனிவர் சமாதியில் ஒற்றைக்கால் தவத்தில் ஈடுபட்டார். இதேபோல் மக்களின் குறை தீர வேண்டி  மௌன விரதத்தில் ஈடுபட்டார்.

Tags : Coroner , Corona, samiyar, penance
× RELATED கொடநாடு விவகாரம் இபிஎஸ், ஓபிஎஸ் இன்று கவர்னரிடம் முறையிட முடிவு