சேலம்: செய்தி தாள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், செய்தி தாள் விநியோகம் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக, தினகரன் நாளிதழ் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, ‘தினகரன்’ அச்சாகும் செய்தி தாள் காகித ரீல்கள் மற்றும் இயந்திரத்தில் அச்சாகும் போதும், பின்னர் கட்டுகளாக கட்டப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் போதும், அதில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அன்றாடம் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் அதே வேளையில், அவர்களது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இப்பணியை தினகரன் மேற்கொண்டு வருகிறது.