×

ஒரே நாளில் புதிய உச்சம் தொட்ட கொரோனா வைரஸ் தாக்கம்: கடந்த 24 மணி நேரத்தில் 227 பேருக்கு தொற்று; பாதித்தோர் எண்ணிக்கை 1401 ஆக உயர்வு

டெல்லி : கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1401 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது.தற்போதைய நிலவரத்தின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1041 ஆக அதிகரித்துள்ளது. 102 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணம் அடைந்து இருப்பதாகவும்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*ஆந்திர மாநிலத்தில் புதிதாக 17 பேருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களின் 9 பேர் டெல்லி நிஸாமுதீனில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர்.ஈரானில் இருந்து ராஜஸ்தான் திரும்பிய 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 83ஆக அதிகரித்துள்ளது.

*மேற்குவங்கத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் அம்மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

*திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவிட்-19 பாதிக்கப்பட்ட போதன்கோட்டை சேர்ந்த நபர் உயிரிழந்தார். இதன்மூலம் கேரளாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது.

Tags : Corona, Poultry, Department of Health, India
× RELATED தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு...