ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளியூர்காரர்களை கை, கால்களை கழுவிய பின்னரே ஊருக்குள் அனுமதிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ளது கோவிந்தமங்கலம் கிராமம். இங்குள்ள இளைஞர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மங்கையற்கரசி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனொரு பகுதியாக கிராம எல்லையில் தடுப்பு அமைத்துள்ளனர். வெளியூர்களில் இருந்து ஊருக்குள் வரும் நபர்களை அங்கேயே நிறுத்தி, கிருமிநாசினி கலந்து வைத்துள்ள தண்ணீரில் கை, கால்களை கழுவி சுத்தம் செய்த பின்னரே ஊருக்குள் அனுமதிக்கின்றனர்.