சென்னை: தமிழக அரசின் ‘கோவிட்-19’ தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒருநாள் ஊதியத்தை மின்வாரியம் மற்றும் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வழங்குகின்றனர். இதுதொடர்பாக மின்வாரிய கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், மின்வாரிய தலைவருக்கு அளித்துள்ள கடிதத்தில், ‘கொரோனா நிவாரணத்துக்கு தமிழக மின்வாரிய ஊழியர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள் மனமுவந்து தங்களது ஒருநாள் ஊதியத்தை ஏப்ரல் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ள தொழிற்சங்கத்தினர் சம்மதித்துள்ளனர். இதை முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.