சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 கோடி நிதி வழங்கியுள்ளார். கொரோனா வைரசால் நாடு முழுவதும் முடங்கி கிடக்கும் நிலையில், பிரதமரின் நிவாரண நிதிக்கும், முதல்வரின் நிவாரண நிதிக்கும் பலர் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய, மாநில அரசுகளுக்கு நிதி வழங்கியுள்ளார். இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரசை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெசரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.