சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் வீடு திரும்பினார். கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25 வயது பெண் வீடு திரும்பினார். பின்லாந்தில் இருந்து திரும்பிய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். தமிழகத்தில் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 45,000-லிருந்து 75,000-ஆக அதிகரித்துள்ளது.