கேரளாவில் மேலும் 32 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 213-ஆக அதிகரித்துள்ளது. இதில் 17 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 15 பேருக்கு தொற்று மூலம் பரவியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காசராகோடு -17, கண்ணூர்- 11, வயநாடு -2, இடுக்கி -2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: