ரோம் : கொத்து கொத்தாக நிகழ்ந்து வரும் கொரோனா மரணங்களை தடுத்து நிறுத்த வழிதெரியாமல் இத்தாலி அரசு தடுமாறி வருகிறது. கொரோனா வைரஸின் தீவிர பரவல் எதிரொலியாக இத்தாலியின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 756 பேர் உயிரிழந்துவிட்டனர். இதனையடுத்து அங்கு ஒட்டு மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,779 ஆக அதிகரித்துள்ளது. கடும் தடுப்பு நடவடிக்கை மத்தியிலும் இத்தாலியில் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் அங்கு 5,300 பேர் புதிதாக தொற்றுக்கு இலக்காகி உள்ளனர்.