சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் தலா ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும் ஆளுநர் நிதியுதவி வழங்கியுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 29 பேர் உயிரிழந்த நிலையில், 1071 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 22ம் தேதி ஒரு நாள் மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். தமிழகத்தில் நேற்று வரை 50 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.