தமிழகத்தில் புதிதாக ஒரே நாளில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:
(51)... 25 வயது ஆண், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
(52 to 55).. 52 வயதுடைய பெண், 76 வயதுடைய பெண், 15 வயதுடைய பெண், 20 வயதுடைய ஆண் ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (இந்த 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் இருந்து திரும்பிய நபருடன் தடோரப்பில் இருந்தவர்கள்).( 56 to 65) ... ஈரோட்டில் 10 பேர்(அனைவரும் ஆண்கள்) ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள். (66)... சென்னை பிரோட்வேயில் வசிக்கும் 50 வயதுடைய பெண், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.(67)... டெல்லியில் இருந்து திரும்பிய குளித்தலையை சேர்ந்த 42 வயதுடைய ஆண், கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.இவர்கள் அனைவரும் கொரோனா தொற்று தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள், இவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.