சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67-ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று வரை 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவித்தார்.