சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஏப்ரல்.1-ம் தேதி அமல்படுத்தப்படவிருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக திருவாரூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்குப் பின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். தமிழகத்தில் சோதனை முயற்சியாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்கனவே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.