ஆலந்தூர்: கொரோனா தடுப்பு பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மாநகராட்சி 14 மற்றும் 15வது மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு 1,100 முக்கவசங்கள், 1,300 கையுறை, 25 லிட்டர் கிரிமிநாசினி ஆகியவற்றை சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த்ரமேஷ் வழங்கினார்.