திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு வார்டில் உணவு, மருந்து, இதர பொருட்கள் வழங்க ரோபோ பயன்படுத்துவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் நேற்று நடந்தது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு வார்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோய் தடுப்பிற்கென பிரத்யேக ஆடைகளையும் பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா அறிகுறி தென்பட்டால் அந்த வார்டில் பணியில் உள்ள செவிலியர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.