தம்பதிக்கு கொரோனா என வதந்தி பரப்பியவருக்கு வலை

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் வாட்ஸ்அப் மூலம் கணவன்- மனைவிக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக அவதூறு பரப்பிய பெண் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள வண்ணாத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(48). விவசாயியான இவரது மனைவி லட்சுமி(40). இவர்கள் அஞ்செட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர். அந்த புகாரில், எங்கள் ஊரைச் சேர்ந்த மாது மனைவி கோவிந்தம்மாள் என்பவர், வாட்ஸ்அப் மூலம் எங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாகவும், தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி நாங்கள் அடிக்கடி வெளியில் சென்று வருகிறோம் எனவும் அவதூறு பரப்பி எங்களை அவமானப்படுத்தியுள்ளார்.

எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட அஞ்செட்டி போலீசார், அவதூறு பரப்பிய அப்பெண் மீது தகவல் தொழில்நுட்ப பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதனையறிந்த கோவிந்தம்மாள் தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: