திருவனந்தபுரம்: மதுக்குடிக்க முடியாமல் சிலர் தற்கொலை செய்வதை தடுக்க கேரளத்தில் மது விற்பனையில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மதுப்பிரியர்களுக்கு மது விற்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கொரோனாவால் உயிரிழப்போரை விட மது இல்லாமல் தற்கொலை செய்துகொள்வோர் அதிகரிப்பு என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.