×

கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக PM-CARES-க்கு அளிப்படும் தொகை சமூக பொறுப்புணர்வு திட்டமாகிறது: நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆஃபர்

டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் தாக்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம்  முழுவதும் 192 நாடுகளுக்கு மேலாக பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,956 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7 லட்சத்து 21 ஆயிரத்து  330 பேரை பாதித்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 004 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர். 1129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 116 பேர்  குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்க்கொண்டு நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பல நோயாளிகளுக்கு சேவை செய்து  வருகின்றனர்.

கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போருக்கு நன்கொடை வழங்க அனைத்து தரப்பு மக்களும் விருப்பம் தெரிவித்தனர். அந்த உணர்வை மதிக்கும் வகையில்,   குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த PM-CARES நிதியத்திற்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த நிதி தற்போதைய துன்பகரமான சூழலை  சமாளிக்கவும், எதிர்காலத்தில் இதே போன்ற ஆபத்துகளை சமாளிக்கவும் உதவும்,’ என கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை  தணிக்க, கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது.

இதுபோன்ற அவசர கால மற்றும் துயர சூழ்நிலையை கையாள ஓர் தேசிய நிதியம் இருப்பது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிவாரணம்’ (PM-CARES) என்ற நிதி  தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி வழங்க விரும்புவோர் www.pmindia.gov.in என்ற இணையதளத்தில் சென்று, தங்களின் பங்களிப்பை கிரெடிட், டெபிட் கார்டு, யுபிஐ, நெட் பேங்கிங் மற்றும் ஆர்டிஜிஎஸ் அல்லது என்இஎப்டி  மூலமாக செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி நன்கொடை வழங்க கோரி டுவிட்டரில் பதிவிட்ட, சில நிமிடங்களில், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், PM-CARES  நிதியத்திற்கு பணம் செலுத்தத் தொடங்கினர். பலரும் செலுத்திய வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது. லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் 3  ஆண்டுகள் வருவாயில், சராசரி நிகர லாபத்தில் 2 சதவீதம், ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில், சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என்பது கம்பெனிகள் சட்டத்தின் விதியாக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு  நிவாரண நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு, கம்பெனிகளின் சட்டங்களின் கீழ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கான பிரிவில் செலவிட்டதாக கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags : CSR ,Central Government ,Companies , PM-CARES proceeds for Coronation Prevention become a CSR program: Central Government Offer to Companies
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!