பாரீஸ்: உலகளவில் கொரோனா பலி 31 ஆயிரத்து 412 ஆக அதிகரித்துள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்பு, ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் தாக்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 183 நாடுகளில் 6 லட்சத்து 67 ஆயிரத்து 90 பேரை பாதித்துள்ளது. இவர்களில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 700 பேர் குணமடைந்து உள்ளனர். இத்தாலியில் 10 ஆயிரத்து 23 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 92,472 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12,384 பேர் சிகிச்சையில் குணமாகி உள்ளனர். ஸ்பெயினில் 6,528 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 78 ஆயிரத்து 747 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.