நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ள நிலையில், ஆணுறை விற்பனை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஆணுறை விற்பனை சில கடைகளில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆணுறை மட்டுமின்றி, கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஆணுறை தவிர பிற கருத்தடை சாதனங்கள் விற்பனையும் அமோகமாக உயர்ந்துள்ளது. இதுபோல் செக்ஸ் கருவிகள் விற்பனையும் உயர்ந்துள்ளது.