×

வீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ஆணுறை விற்பனை விறுவிறு

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ள நிலையில், ஆணுறை விற்பனை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஆணுறை விற்பனை சில கடைகளில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆணுறை மட்டுமின்றி, கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஆணுறை தவிர பிற கருத்தடை சாதனங்கள் விற்பனையும் அமோகமாக உயர்ந்துள்ளது. இதுபோல் செக்ஸ் கருவிகள் விற்பனையும் உயர்ந்துள்ளது.

இவற்றை ஆன்லைனில் பலர் ஆர்டர் செய்கின்றனர். மேலும், பெரும்பாலான ஆபாச இணையதளங்கள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு சிலர் ஆபாச இணையதளங்களில் பிரீமியம் உறுப்பினர்களாக சேர்ந்து பணம் கட்டியுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : continent ,home ,Jones , Homes, condoms
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு