* பிசிசிஐ 51 கோடி: கொரோனா பிரச்னையை சமாளிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிரதமர் நிவாரண நிதியாக 51 கோடி வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் நன்கொடை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
* 30,000 மாஸ்க்: ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாக உள்ள நிலையில், அந்நாட்டின் பிரபல கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா சார்பில் 30,000 முகக் கவசங்கள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.