புதுடெல்லி: பிரதமர் மோடி அறிவித்த, கொரோனா நிதிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நன்கொடைகள் குவிந்து வருகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் பிரதமர் மோடி, இரண்டு நாட்களுக்கு முன்பு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிகள்’ என்ற பெயரில் ஒரு நிதியை அறிவித்தார். பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டிருந்தார். பிரதமர் அறிவித்த முதல் நாளிலேயே இந்த நிதிக்கு ஏராளமானவர்கள் நன்கொடை அளித்தனர். டாடா நிறுவனம் ரூ.1,500 கோடி வரை நன்கொடை அளித்தது.