பெங்களூரு: மது கடைகள் திறக்கப்படாததால் குடிமகன்கள் மது கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடிமகன்கள் சார்பில் பெங்களூரு மகாலட்சுமி லே அவுட் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கும், கலால் துறை அமைச்சர் நாகேஷுக்கும் வாட்ஸ் அப் மூலம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், ‘கர்நாடக அரசுக்கு மதுபானம் பயன்படுத்தும் அபிமானிகளின் கோரிக்கை. மாநிலத்தில் 6.5 கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் கணிசமானவர்கள் மது குடிக்கிறார்கள்.