மே.வங்க பஸ் உரிமையாளர்கள் பிரதமருக்கு கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பேருந்து, மினி பேருந்து சங்கத்தினர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், `‘நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பயணிகள் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பேருந்து, மினி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பேருந்து நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மாத தவணை, வரி, காப்பீட்டு தொகை செலுத்துவதற்கான கால வரம்பை 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும். உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: