லண்டன்: வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பிரிட்டனில் இரண்டாம் கட்டத்தை அடைவதைத் தடுக்க செப்டம்பர் மாதம் வரை ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று பிரிட்டனின் துணை மருத்துவ அதிகாரி ஜென்னி ஹாரிஸ் கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. இப்போது ஊரடங்கு அகற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. சூழ்நிலைகளைப் பொறுத்து, ஊரடங்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு தொடரலாம்.