திருவனந்தபுரம்: கொரோனா அச்சுறுத்ததால் இந்தியாவில் லாக்-டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் கடந்த வாரம் மதுபார்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுகடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மது கிடைக்காததால் விரக்தி அடைந்த திருச்சூரை சேர்ந்த சனோஜ்(37) கொச்சியை சேர்ந்த முரளி (44) ஆகிய 2 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து ெகாண்டனர்.