1 மணி நேரத்தில் எத்தனை முறை முகத்தை கைகளால் தொடுகிறோம்?

நெல்லை: கொரோனா வைரஸ் தொற்று நம் கைகளுக்கு பரவி முகத்தின் மூலம் உடலுக்கு சென்று நோய் வீரியத்தை பரப்புவதாக டாக்டர்கள் ெதரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே கைகளை தினமும் 10 முதல் 20 முறையாவது கழுவ வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். அதுவும் சாதாரணமாக கழுவாமல் சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு முழங்கை வரை 20 விநாடிகளுக்கு மேல் நன்கு நுரை வரும் வரை தேய்த்து கழுவினால் மட்டுமே கொரோனா வைரஸ் உள்ளிட்ட எந்த வைரசும் கைகளில் உயிரிழக்கும் தன்மை வாய்ந்தவை. கைகளை முகத்திற்கு ெகாண்டு செல்லாமல் இருப்பது நல்லது என்றும் அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் அது யாராலும் சாத்தியம் அல்ல. ஏனென்றால் நாம் எத்தனை முறை முகத்தை கைகளால் தொடுகிறோம் என்பது குறித்த ஆய்வில் பரபரப்பு தகவல்கள் தெரிய வந்துள்ளன. இந்த ஆய்வின்படி மருத்துவ மாணவர்கள் மட்டும் 1 மணி நேரத்தில் குறைந்தது 23 முறை தங்களில் முகத்தில் உள்ள வாய், மூக்கு, கண், காது, கன்னம் பகுதிகளை தொடுகின்றனர். காதுகளை ஒரு முறையும், தாடை, வாய், கன்னம், தலையை தலா 4 முறையும், மூக்கு, கண்ணை தலா 3 முறையும் தொட நேரிடுகிறது. இந்த பகுதிதான் நம் உடலுக்குள் வைரஸ் அல்லது பாக்டீரியா சுலபமாக நுழையும் பகுதியாக உள்ளது.

இதுபோல் அலுவலக பணியில் இருப்பவர்கள் பிற பிரிவினர் ஒரு மணி நேரத்தில் குறைந்தது 16 முறை தங்கள் முக உறுப்புகளை தொடுகின்றனர். இந்த எண்ணிக்கை சிலருக்கு வேறுபடலாம். சற்று கூடுதலாகவோ குறைவாகவோ கூட இருக்கலாம். இப்படி நாம் தொடும் போது அதற்கு முன்னதாக நாம் என்ன பணி செய்தோம், எதை தொட்டோம்., பொது இடங்களில் யார் மீது கை பட்டது. எந்த பொருள் மீது கைபட்டது என்பது நம் நினைவுக்கு வருவதில்லை. எனவே தான் கிருமி உடலுக்கு செல்லுவதை தவிர்க்க கைகளை அடிக்கடி முறைப்படி கழுவ டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Related Stories: