திருச்சி: கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அனுமதியின்றி ஊர்வலம் வந்த தனியார் ஆம்புலன்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் கடந்த 25ம் தேதி முதல் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகரில் போலீஸ் வேன் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அனுமதியின்றி வாகனங்களை இயக்கினால் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து வருகின்றனர். இந்நிலையில நேற்று உறையூர் வாலஜா சாலையில் ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் ராமசந்திரன் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் இருந்தனர்.