சென்னை: தமிழகத்தில் 144 தடை உத்தரவிலிருந்து விவசாயம் சார்ந்த பொருட்கள், வேலைகளுக்கு தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாய பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிறுவனம், விவசாய விளைபொருள் விற்பனையகம், மார்க்கெட், மண்டி போன்றவைகளுக்கும் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.