பால் வாங்குவதில் தகராறு ஒருவருக்கு கத்தி குத்து

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டை அருகே ஆவின் பால் கடை உள்ளது. இந்த கடைக்கு விவேகானந்தர் நகர், மா.பொ.சி.நகர், சிந்தலகுப்பம், பழம்பாளையம், சிறுபுழல்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பால், தயிர், நெய் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், நேற்று விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்த முர்த்தி (54) என்பவர் இந்த கடைக்கு பால் வாங்க வந்தார்.  அப்போது, மூர்த்திக்கு, பால் பாக்கெட்டுக்கு பதிலாக தயிர் பாக்கெட் கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆவின் கடை ஊழியரான ராமு என்பவரிடம் மூர்த்தி தகராறில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மூர்த்தி, தயிர் பாக்கெட்டை எடுத்து கடை ஊழியர் முகத்தில் எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடை ஊழியர் ராம், அருகிலிருந்த கத்தியை எடுத்து மூர்த்தியை குத்தினார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ராமை தேடுகின்றனர்.

Related Stories: