×

கொரோனா நிதிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் சம்பளம்

சென்னை: தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்குகின்றனர். இதுகுறித்து பொதுச்துறை செயலாளர் செந்தில்குமாருக்கு, தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்க தலைவர் பணீந்திர ரெட்டி எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணத்தை சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளவும்” என்று கூறியுள்ளார்.

Tags : IAS officers ,Corona , Corona Fund, IAS Officers, Salary
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் இடமாற்றம்...