புதுடெல்லி: ரிசர்வ் வங்கி உத்தரவை தொடரந்–்து மூன்று இம்எம்ஐ.க்களை ஒத்திவைத்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது. ெகாரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சுமையை குறைக்கும் வகையில், வீட்டுக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன் இஎம்ஐ.க்களையும் 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர், இரண்டு நாட்களுக்கு முன்பு இஎம்ஐக்கள் ஒத்திவைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அனைத்து டெர்ம் லோன்களின் தவணைகளும் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் ரஜனீஷ் குமார் தெரிவித்துள்ளார்.