டெல்லி: கொரோனா அச்சுறுத்தலால் திகார் சிறையில் இருந்து 356 கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனிடையே சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைப்பதற்கான நடவடிக்கையை சிறைத்துறை எடுத்து வருகிறது.