×

கொரோனா: ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து இருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து இருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். மிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ச் செய்யப்பட்டநிலையில் மேலும் 2 பேர் வீட்டிற்கு அனுப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞரும், அயர்லாந்தில் இருந்து திரும்பிய நபரும் டிஸ்சார்ச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Two ,Minister ,Stanley Hospital , Corona, Stanley Hospital, Treatment, Discharge, Minister Vijayabaskar
× RELATED மாவா தயாரித்து விற்ற இருவர் கைது