சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது குறித்து காணொலிக் காட்சி மூலம் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.