வாஷிங்டன்: உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை தயார் செய்ய போர்க்கால பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 102,325 ஆக உயர்ந்து உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் நகரத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு 10 பேரில் 9 பேர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் செயற்கை சுவாசக் கருவிகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு செயற்கை சுவாசக் கருவியை இரு நோயாளிகளுக்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பெருகிவரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கருத்தில்கொண்டு உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் விநியோக பற்றாக்குறைக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ஜெனரல் மோட்டார்ஸை வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய போர்க்கால பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டு உள்ளார்.