புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முடக்க நிலை அறிவிக்கப்பட்டு உள்ளதால், மே 3ம் தேதி நடத்தப்பட இருந்த நீட் தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு, வரும் மே மாதம் 3ம் தேதி நடத்தப்பட இருந்தது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை அறிவித்துள்ளது. மேலும், பிளஸ் 2-ல் இன்னும் சில பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இதனால், நீட் தேர்வையும் ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் ேநற்று அளித்த பேட்டியில், ‘‘நீட் தேர்வை எழுதுவற்காக மாணவர்களும், பெற்றோர்களும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள மையங்களுக்கு செல்ல வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, நீட் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.