சென்னை: கூட்டணி கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் செல்போனில் நலம் விசாரித்தார். நாட்டின் நிலைமை, மக்களின் தேவைகள் குறித்தும் அவர் பேசினார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இந்நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு முடுக்கி விட்டுள்ளது. நோய் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளியில் செல்வதை தவிர்த்து மக்கள் வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். அத்தியாவசிய ேதவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.