திருப்புத்தூர்: கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுவிட திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் 21 நாட்கள் தொடர்ந்து வேதமந்திரம் ஓதப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளன. அந்தந்த கோயில்களின் ஆகம விதிப்படி முறையான பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.