சென்னை: ஊரடங்கு காரணமாக கார்களை இயக்க முடியாத நிலை நிலவுவதால், நாடு முழுவதும் ஒப்பந்தத்தில் டிரைவர்களுக்கு அளித்திருக்கும் கார்களை திரும்ப ஒப்படைக்க OLA நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று வீடுகளில் 15 ஆயிரத்து 298 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 116 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் 743-ல், 608 பேருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளது. 120 மாதிரிகளின் முடிவுகள் வரவிருக்கின்றன. கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்கள், ஆன்லைன் நிறுவனங்கள் பாதிப்பு அடைந்துள்ளன.