கொல்கத்தா : மேற்கு வங்க தொழிலதிபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது 30 சொகுசு பங்காளக்களை அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் 16 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா வைரஸால் 650 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் தஞ்சமடைவோரின் எண்ணிக்கை அதிகமானால் இடம் போதாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தனியார் மருத்துவமனைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் பிரபல திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். அதன்படி,
நடிகர் கமலஹாசன், கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தனது வீட்டையே எடுத்துக்கொள்ளுமாறு அரசிடம் வலியுறுத்தினார்