சென்னை: தமிழகத்தில் இதுவரை 2,09,284 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தனி வார்டுகளில் 13,727 படுக்கைகள் உள்ளதாகவும், அதில் 284 பேர் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் 1,039 பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 933 பேருக்கு கொரோனா இல்லை என்றும், ஒருவர் குணமடைந்ததாக தெரிவித்தார்.