டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலககோப்பை தகுதிச் சுற்றுபோட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2021 ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகின்றன, அதற்கான தகுதிச் சுற்று போட்டிகளை ஐசிசி நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. அதாவது 2021 ஐசிசி டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் குவைத், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், பெல்ஜியம், மலேசியா, பின்லாந்து ஆஇய நாடுகளில் நடைபெறும் போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன.