சென்னை: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய மாநில அரசுக்கு சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக இந்த கொரோனா தொற்றை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் வெண்டிலேட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த அளவுக்கு இந்த வெண்டிலேட்டர்கள் கையிருப்பில் உள்ளது என மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சுவாசத்துக்கு உதவும் வெண்டிலேட்டர் கருவிகள் அரசின் கைவசம் போதிய அளவில் இல்லை. கடந்த 21-ம் தேதி வரை வெண்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது ஏன்?. என கேள்வி எழுப்பினார்.