சென்னை: தமிழகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்க கட்டுப்பாடு தேவை என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவசியமின்றி இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்புவதை தடுப்பதற்கு நேரக் கட்டுப்பாடு உதவும் என தெரிவித்துள்ளனர்.