ஊட்டி: ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பைக்கில் சுற்றிக்கொண்டிருந்த வாலிபர்களை பிடித்து போலீசார் விரட்டியடித்தது மட்டுமின்றி, சில இடங்களில் தோப்புக்கரணமும் போட வைத்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், இதனை மீறி நேற்று ஊட்டி மட்டுமின்றி, அனைத்து பகுதிகளிலும் சிலர் வெளியில் வந்தனர். அனைத்து பகுதிகளிலும், காவல்துறையினர் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்ட பின்னரே மக்களை நகருக்குள் அனுமதித்தனர். மேலும், தேவையின்றி ஊருக்குள் வந்த பலரை போலீசார் எச்சரித்தது மட்டுமின்றி, விரட்டியடித்தனர்.