சென்னை: காவல்துறையில் 50 வயதுக்கு மேலான காவலர்களுக்கு ஒய்வு வழங்க சென்னை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நீரிழிவு நோய் உட்பட எந்த நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் ஓய்வெடுக்க இணை ஆணையர் சுதாகர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கண்காணிப்பில் உள்ள காவலர்கள் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.