கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 4,000 கோடி சிறப்பு நிதி: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.4 ஆயிரம் கோடி வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.  கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்ட ஊதியத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள் கணிசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  எனவே அதற்கான நிதியை 500 கோடியாக உயர்த்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் சுமார் 12 லட்சம் பேரும், அமைப்புசார தொழிலாளர்கள் 15 லட்சம் பேரும் உள்ளனர். இவர்கள் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்படுவார்கள். எனவே 15 கிலோ அரிசியுடன் ரூ.1000 சிறப்பு தொகையும், எண்ணெய், பருப்பு தலா 1 கிலோ இலவசமாக வழங்குவதையும் அறிவித்துள்ளேன்.  எனவே இதற்கு ரூ.500 கோடி ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சிறு, குறு நிறுவனங்களுக்கான வங்கி கடன் வட்டியை இரண்டு காலாண்டுகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்.   கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கும், தமிழக அரசுக்கு நிதி ரீதியாக ஆதரவளிப்பதற்கும் கையில் இருக்கும் பணிகளின் அவசரத்தை கருத்தில் கொண்டு, ரூ.4000 கோடி சிறப்பு உதவி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி நிவாரண நடவடிக்கைகளுக்கான எனது கோரிக்கையை அவசரமாக பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: